Tuesday, October 15, 2013

லட்சுமி குபேர பூஜை!


அதிபதி லட்சுமி,அதைக் கண்காணித்துக் காப்பவர் குபேரன்.இவ்விருவரையும் இணைத்து லட்சுமி குபேர பூஜை செய்து வர நிலையான செல்வம் உண்டாகும். இழந்த   செல்வத்தையும் பெற்று  கோடி புகழோடு வாழலாம்.
      செல்வம் பெருக்கும் லட்சுமி குபேர பூஜையும் தீபாவளியின் ஸ்பெஷல்அடையாளம்! இந்த பூஜை செய்வதால் நம் இல்லத்தில் சகல ஐஸ்வரியங்களும் பெருகும் என்பது ஐதீகம். பெண்கள் மட்டுமல்ல, ஆண்களும்  விரதம் இருந்து லட்சுமி குபேர பூஜை செய்யலாம். பூஜைக்கான ஏற்பாடுகளை தீபாவளிக்கு முந்தைய நாள்இரவே செய்து முடித்துவிடுவது  நல்லது.
      தீபாவளி அன்று அதிகாலையிலேயே எழுந்து கங்கா ஸ்நானம் செய்த பிறகு, பூஜையறையில் லட்சுமி குபேரர் படம் மற்றும் குபேரயந்திரத்தை கிழக்கு அல்லது மேற்கு திசை பார்த்தபடி வைத்து, பூஜையறையையும் தெய்வத் திருவுருவங்களையும் மலர்களால் அலங்காரம்  செய்யவேண்டும். லட்சுமி குபேரர் படத்துக்கு மஞ்சள், குங்குமம் இட வேண்டும். ஸ்வாமி படத்துக்கு முன்பாக தலை வாழையிலை விரித்து,  அதில் நவதானியங்களைத் தனித்தனியாகப் பரப்ப வேண்டும்.
 குபேரனையும் லட்சுமியையும் ஒருசேர ஒருமுறை தரிசித்து வந்தால், அவர்கள்வாழ்வில் செல்வம் செழித்தோங்கும் என்பதில் ஐயமில்லை.
அன்றைய தினம் குபேரனை வழிபடுவது மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும்.


                                ஓம் யஷயாய குபேராய வைஸ்ரவனாய
                                  தனதாந்யாதி பதயே
                                     தநதாந்ய ஸம்ரும்திம்மே,
                                           தேஹி தபாயஸ்வாஹ! 

No comments:

Post a Comment