Tuesday, October 15, 2013

தொழில் விருத்தி அடைய செல்ல வேண்டிய கோவில்


ஸ்ரீ மச்ச சம்கார மூர்த்தி
                                        அச்சமிட்ட மீனை அழித்தார்  சிவபெருமான்                                        மச்சம் ஹாரமூர்த்தி ஆனாராம்                                        தொழில்விருத்தி யாகும் தொடங்கும் தொழில்கள்                                        வழிபிறக்கும் நல்வாழ்வு  வந்து!

 சொமுகசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் கொடுமைப்படுத்தி வந்தான். தேவர்கள் மகாவிஷ்ணுவின் முறையிட,திருமால் மச்சாவதரம் (மீன் உருவம்)எடுத்து கடலில் சென்று மறைந்திருந்த   சொமுகசுரனைக் கொன்றார். தேவர்கள்  மகிழிந்தனர். திருமாலோ மிக்க கர்வம் கொண்டு பாற்கடலையே  கலக்கினார்.    
      சதாசிவன் அக்கணமே அந்த  மீனின் கண் மலர்களைப் பிடுங்கி  அணிந்து கொண்டு காட்சி திருகோலம்    ஸ்ரீ மச்ச சம்கார மூர்த்தி  எனப்படுகிறது .இவரை காஞ்சீபுரத்துக்கோவிலில் தரிசிக்கலாம்.
       அங்கு  கல்தூணில் இவ்வுருவம் செதுக்கப்பட்டது.
இவருக்கு வில்வ அர்ச்சனையும்புளிசாத நைவைத்தியமும் செவ்வாய் அன்று செய்து எள்  தீபம் ஏற்றினால் தொழில் விருத்தி அடையும்.
பல  புதியத்  தொழில்கள் தோன்ற வழி  பிறக்கும்.        

No comments:

Post a Comment